பாப்பா! பாப்பா! பாரம் மா!
பச்சைப் பசுங்கொடி பாரம்மா.
ஆடும் மயிலை பாரம்மா – நீ
அழகு தமிழில் பாடம்மா.
கூவும் குயிலை பாரம்மா – தினம்
பூப்போல் நீயும் சிரித்திடம்மா.
அழகு அன்னம் பாரம்மா – நீ
அன்பாய் என்றும் பழகிடம்மா.
பச்சை பசுங்கிளி பாரம்மா – அது
பிள்ளை மொழி பேசுதம்மா.
தாவும் கௌரிமான் பாரம்மா – நீ
தன் மானம் காத்திடம்மா.
*********
எழுதிய நாள்: 23.08.1988
*********
By மா.கலை அரசன்.