காதலின் வேதம்…


காதலின் வேதம் தினம் மெருகேரும்
கனவுகள் தோறும் கற்பனை மாறும்
காவியம் போலே தினம்தினம் வளரும்
கதவுகள் ஏது தடை போடக்கூடும்

காதல் கண்ணால் பார்த்து வருவதுமுண்டு
காதால் கேட்டு நாளும் வளர்வதுமுண்டு
கனவில் கூட இணையை கண்டவருண்டு
கற்பனையாக சிலர் வளர்ப்பதும் உண்டு

நெஞ்சில் நுளைந்து நினைவில் வளர்ந்தால்
நிலையான காதலென்பேன் நாளும் வளருமென்பேன்
நித்தியயௌவநமாய் பார் புகழ மிளிருமென்பேன்
நிதியம் இதுவே வாழ்வில் என்பேன்

* * *

அருஞ்சொற்பொருள்:

நித்தியயௌவநம் – என்றும் இளமை.
நிதியம் – திரவியம், செல்வம்