என் அன்பே!
உன் பெயரை தினம் தினம்
ஓராயிரம் முறை
உச்சரிக்கவே செய்கின்றேன் – ஏன்
ஒவ்வோரு முறையும்
முதல் முறையாய் உணர்கின்றேன்…
நீ மட்டுமல்ல எனக்கு பரவசம்
உன் பெயர் தாங்கிய
ஒவ்வொரு பொருளும்…
யாரோ யாரையோ அழைக்கும் பெயர்
உனதாகிவிட்டால்
நின்று நிதானித்து
அவர் முகம் பார்த்து செல்கின்றேன்
என்னவளின் பெயர் தாங்கிவரும்
அதிசயமென்று…
காற்றின் மீது கூட
கோபம் வருகின்றது
அது உன் கேசம் கலைத்து செல்வதால்…
தென்றலின் மீது
பாசமும் வருகின்றது
அது உனை வருடி
மகிழ்வித்துச்செல்வதால்…
நீ சுகவீனப்பட்டு
உடல் தளரும் போது
துவண்டு போவது
என் மனமும் தான்…
பிரிய சகி!
எந்த கணத்தில் எதனால்
எப்படி ஈர்க்கப்பட்டேன் உன்வசம்…
விடைதெரியாமல் தான்
தத்தளிக்கின்றேன்…
காதல் வயப்பட்ட
எண்ணில்லா உயிர்களில்
நானும் ஒருவனாக…
–o0o–