செப்டம்பர் 17, 2007 இல் 11:17 பிற்பகல் (சமுதாயம், ஹைகூ)
சோகத்தில் புலம்பினான் விவசாயி
வந்தும் கெடுக்கின்றது வராமலும் வாட்டுகின்றது…
மழை.
ஃ
இதயம் பிளந்து சந்தோசித்தான் ஒருவன்
இதயம் பிளவுபட்டவளும் நிம்மதியாய் சுவாசித்தாள்
உழுத நிலம்.
ஃ
பயிர்வளர்ப்பது விவசாயின் தர்மம்
பிடுங்கி அழிப்பதும் தர்மம்தான்
வயலில் களை.
ஃ
சந்தோசமாக இருந்தது விவசாயிக்கு
குவிந்திருந்த நெற்மூட்டை கண்டு;
சந்தைவிலை அறியும்வரை.
ஃ
புலம்பல்கள் இன்னும் ஓய்தபாடில்லை!…
எவன் பொருளுக்கு எவன் விலை வைப்பது?…
ஏமாளியாய் விவசாயி.
ஃஃஃ
1 மறுமொழி
செப்டம்பர் 17, 2007 இல் 8:23 மு.பகல் (பெண்ணியம், ஹைகூ)
வாங்கிய பொருளுக்கு விலை கொடுதாள் கடையில்…
அவளையும் கேட்டு பொன்பொருளும் கேட்கின்றார்கள்…
திருமணச் சந்தையில்.
ஃ
இணை கோடுகளின் பயணம்
ஒரு கோட்டிற்கு மட்டும் சுமை…
வாழ்க்கை.
ஃ
விடைதெரிந்தால் சொல்லுங்களேன்?…
பெண் எப்போது தாழ்ந்து போனாள்?!…
சமனற்ற உலகம்.
ஃ
தெய்வமென்று வணங்குவோம்…
தீட்டென்றும் ஒதுக்கிவைப்போம்…
முரண்பாடுகள்.
ஃ
காலத்தின் கொடுமை வலியது….
தென்றல்கூட அடைபட்டுக் கிடக்கின்றது…
குடும்பச் சிறை.
ஃஃஃ
1 மறுமொழி