விவசாயி – ஹைகூ…

சோகத்தில் புலம்பினான் விவசாயி
வந்தும் கெடுக்கின்றது வராமலும் வாட்டுகின்றது…
மழை.



இதயம் பிளந்து சந்தோசித்தான் ஒருவன்
இதயம் பிளவுபட்டவளும் நிம்மதியாய் சுவாசித்தாள்
உழுத நிலம்.



பயிர்வளர்ப்பது விவசாயின் தர்மம்
பிடுங்கி அழிப்பதும் தர்மம்தான்
வயலில் களை.



சந்தோசமாக இருந்தது விவசாயிக்கு
குவிந்திருந்த நெற்மூட்டை கண்டு;
சந்தைவிலை அறியும்வரை.



புலம்பல்கள் இன்னும் ஓய்தபாடில்லை!…
எவன் பொருளுக்கு எவன் விலை வைப்பது?…
ஏமாளியாய் விவசாயி.

ஃஃஃ

திருமணச் சந்தை – ஹைகூ.

வாங்கிய பொருளுக்கு விலை கொடுதாள் கடையில்…
அவளையும் கேட்டு பொன்பொருளும் கேட்கின்றார்கள்…
திருமணச் சந்தையில்.

இணை கோடுகளின் பயணம்
ஒரு கோட்டிற்கு மட்டும் சுமை…
வாழ்க்கை.

விடைதெரிந்தால் சொல்லுங்களேன்?…
பெண் எப்போது தாழ்ந்து போனாள்?!…
சமனற்ற உலகம்.

தெய்வமென்று வணங்குவோம்…
தீட்டென்றும் ஒதுக்கிவைப்போம்…
முரண்பாடுகள்.

காலத்தின் கொடுமை வலியது….
தென்றல்கூட அடைபட்டுக் கிடக்கின்றது…
குடும்பச் சிறை.

ஃஃஃ