திருமணச் சந்தை – ஹைகூ.

வாங்கிய பொருளுக்கு விலை கொடுதாள் கடையில்…
அவளையும் கேட்டு பொன்பொருளும் கேட்கின்றார்கள்…
திருமணச் சந்தையில்.

இணை கோடுகளின் பயணம்
ஒரு கோட்டிற்கு மட்டும் சுமை…
வாழ்க்கை.

விடைதெரிந்தால் சொல்லுங்களேன்?…
பெண் எப்போது தாழ்ந்து போனாள்?!…
சமனற்ற உலகம்.

தெய்வமென்று வணங்குவோம்…
தீட்டென்றும் ஒதுக்கிவைப்போம்…
முரண்பாடுகள்.

காலத்தின் கொடுமை வலியது….
தென்றல்கூட அடைபட்டுக் கிடக்கின்றது…
குடும்பச் சிறை.

ஃஃஃ

1 மறுமொழி

  1. Ms.bala சொன்னது,

    செப்டம்பர் 27, 2007 இல் 1:27 பிற்பகல்

    வாங்கிய பொருளுக்கு விலை கொடுதாள் கடையில்…
    அவளையும் கேட்டு பொன்பொருளும் கேட்கின்றார்கள்…
    திருமணச் சந்தையில்

    This is true. But now this is a fashion now. Lot of Parents see only the resources, supportness of the parents & beauty of the girl. No one sees their good character.


மறுமொழியொன்றை வழங்குக