விவசாயி – ஹைகூ…

சோகத்தில் புலம்பினான் விவசாயி
வந்தும் கெடுக்கின்றது வராமலும் வாட்டுகின்றது…
மழை.



இதயம் பிளந்து சந்தோசித்தான் ஒருவன்
இதயம் பிளவுபட்டவளும் நிம்மதியாய் சுவாசித்தாள்
உழுத நிலம்.



பயிர்வளர்ப்பது விவசாயின் தர்மம்
பிடுங்கி அழிப்பதும் தர்மம்தான்
வயலில் களை.



சந்தோசமாக இருந்தது விவசாயிக்கு
குவிந்திருந்த நெற்மூட்டை கண்டு;
சந்தைவிலை அறியும்வரை.



புலம்பல்கள் இன்னும் ஓய்தபாடில்லை!…
எவன் பொருளுக்கு எவன் விலை வைப்பது?…
ஏமாளியாய் விவசாயி.

ஃஃஃ

1 மறுமொழி

  1. Ms.bala சொன்னது,

    செப்டம்பர் 27, 2007 இல் 1:23 பிற்பகல்

    இதயம் பிளந்து சந்தோசித்தான் ஒருவன்
    இதயம் பிளவுபட்டவளும் நிம்மதியாய் சுவாசித்தாள்
    உழுத நிலம்

    So nice of you. This is called contraversy. (Muran badugal) Super.


மறுமொழியொன்றை வழங்குக