இறைவன் – ஹைகூ

இறைவனின் சிலைவடித்த மனிதனைப் பார்க்கின்றேன்;
மனிதனைப் படைத்த இறைவன் எங்கே?!…
விடையில்லா வினாக்கள்.

இறைவன் கருணை வடிவானவன்;
மன்னிக்கும்படி மனமுருகி வேண்டினான்…
சிலை திருடியவன்.

பாவங்கள் கரைந்துபோக காணிக்கை செலுத்தினான்
உண்டியலில் விழுந்த காசு சொல்லி நகைத்தது
நான் லஞ்சத்தில் வந்த காசென்று.

உளியின் உரசலை பொறுத்திருந்தது கல்லாக…
அமைதியாக ஆசிர்வதித்துக் கொண்டிருக்கின்றது இப்போது…
கடவுள் சிலையாக….

தெய்வம் மன்னித்துக்கொண்டுதான் இருக்கின்றது
தவறுகள் செய்யும் போதெல்லாம்;
அன்னையின் வடிவாக…

ஃஃஃ

2 மறுமொழிகள்

  1. cheena சொன்னது,

    செப்டம்பர் 22, 2007 இல் 6:47 மு.பகல்

    நன்று! நன்று!
    ஹைக்கூ இறைவனைப் பற்றி பொருள் புரியும் படி எழுதப்பட்டிருக்கிறது – வாழ்வில் விடை இல்லா வினாக்கள் அதிகம்

  2. Ms.bala சொன்னது,

    செப்டம்பர் 27, 2007 இல் 1:21 பிற்பகல்

    தெய்வம் மன்னித்துக்கொண்டுதான் இருக்கின்றது
    தவறுகள் செய்யும் போதெல்லாம்;
    அன்னையின் வடிவாக…

    Closing is fantastic. At last, you said, Mother is God. I love that. I accept that. It is the truth.


மறுமொழியொன்றை வழங்குக