அரும்புதல் எப்போதும் அழகானது
பூக்களின் மென்மையில்
பூரிக்காதவர்கள் இருப்பது கடினம்…
மனிதனின் பிறப்பும்
மலரின் அரும்புதல் போல்தான்…
ஆனால்
மழலையாய் இருக்கும்போது மட்டுமே
மென்மையாய் இருக்கின்றோம்.
வளர்ச்சியின் வேகத்தில்
மென்மையை இழக்கின்றோமா?!…
மறக்கின்றோமா?!…
எதுவோ ஒன்று…
ஆனால்
நாம் இறுகிப்போகின்றோம்..
காலவெள்ளத்தில் சிக்கிய
கல்லாக இறுகிப்போகின்றோம்…
காற்றின்
வேகத்தில் சிக்கி தவிக்கும்
இலைகளாக கிழிபடுகின்றோம்…
சில வேளைகளில்
திசைமாறும் சிறு இலையாய்
வாழ வழிதெரியாது தவிக்கின்றோம்…
கிழிந்துபோன, இறுகிப்போன
இதயங்களும்
மீண்டும் புதுமலராய்
பூரிக்கத்தான் செய்கின்றது…
பூக்களின் இதழ்களின் மென்மையை
உணரத்தான் செய்கின்றது…
நம்பிக்கையின் ஆணிவேர் கூட
புதிதாய் நெஞ்சில்
துளிர்க்கத்தான் செய்கின்றது…
வருடம் ஒருநாள் வரும்
பிறந்த நாளில்!…
ஃ ஃ ஃ
bala சொன்னது,
அக்டோபர் 8, 2007 இல் 5:42 பிற்பகல்
Fமனிதனின் பிறப்பும்
மலரின் அரும்புதல் போல்தான்…
ஆனால்
மழலையாய் இருக்கும்போது மட்டுமே
மென்மையாய் இருக்கின்றோம்.
வளர்ச்சியின் வேகத்தில்
மென்மையை இழக்கின்றோமா?!…
மறக்கின்றோமா?!…
Fantastic. I like verymuch kalai. Simply u starting well. I like the way u comapring the blossom to human life. Keep it up. Thank u very much.
Suresh சொன்னது,
பெப்ரவரி 28, 2008 இல் 12:34 பிற்பகல்
This is from :
http://kalaiarasan.wordpress.com/2007/10/08/kalaimarthandam-227-birthday/