சோம்பேரியாய் தூங்குகின்றதே!…
அழிந்து போகப்போவதை அறியாதோ?…
புல்லின் நுனிதூங்கும் பனித்துளி.
ஃ
தென்றலுக்கும் துவேசம் இருக்கவே செய்கின்றது
வியர்வைத் துளிகளை வீசியெறிந்து சென்றிருக்கின்றது…
புல்லின் நுனியில் பனிநீர்த் திவலைகள்.
ஃ
இரவுப் பெண்ணவள் கொடுத்த முத்தத்தின் ஈரமோ…
விடிந்த பின்னும் பொக்கிசமாய் இதழ்மேல் பாதுகாக்கின்றதே…
பாந்தமாய் ரோஜா இதழமர்ந்த பனித்துளி.
ஃ
சோம்பேரிச் சூரியன்!…
வெண்போர்வையை இன்னும் சுருட்டவில்லை…
பனிபடர்ந்த சாலை.
ஃ
வானம் பன்னீர் தூவிக்கொண்டுருக்கின்றது…
எந்த உலகத்து வேந்தனுக்கு திருமணமென்று தெரியவில்லை!…
தரையிரங்கும் பனித் திவலைகள்.
ஃஃஃ