நட்சத்திரங்களை நகையாக்க வெகுநாளாய் நான் நினைக்கின்றேன்
நட்டநடு இராத்திரியில் எனைப்பார்த்து ஏளனமாயது சிரிக்கின்றது
பண்பில்லா பாதகர்தாம் பெண்பிள்ளை எம்மை வதைக்கின்றார்
வெண்ணிலவின் தங்கைகளே நீங்களுமா எள்ளி நகையாடுகின்றீர்!..
பெண்ணிலவு எம்மை கண்சிமிட்டி நகைக்க வேண்டாம்
வெண்ணிலவை இரசிப்பதுபோல் எமை இரசிக்க இரசிகருண்டு
கண்ணடித்து கண்ணடித்து காதலிக்க காளையர் கூட்டமுண்டு
வீணே சுற்றித்திரியும் உதவாத எண்ணம் கொண்டு.
கல்யாணப் பேச்செடுத்தால் காணாமல்ப்போன கூட்டம் கண்டு
அல்லல்பட்டு வெம்மையில் வெளுப்பேரிப்போன இதயம் உண்டு
சொல்லொண்ணா துயரத்தில் வாடி வதங்கி நின்று
சொல் நிலவே ஆணினத்திற்கிது தகுமா வென்று.
வறுமையில் வாடினால் உணவுக்கு வழிதேடி உழைக்கலாம்
வரதட்சனையால் வாடுகின்றேன் விடுபட வழியேது சொல்நிலவே.
நட்சத்திரங்களே வாருங்கள் நகையாகி என்கழுத்தில் சேருங்கள்
கிடைக்குமா திருமண பந்தம் கனவிலாவதெனறு பார்ப்போம்.
ஃஃஃ