உறவினர்கள் யாராவது வருவார்களாம்,
மரத்திலிருந்து கரைந்து கொண்டிருந்தது
பசிமயக்கத்தில் காகம்.
ஃ
நீயும் நானும் உணரவேண்டும்,
ஒற்றுமையாய் இனத்தோடு பகிர்ந்துண்ணும்
காகம்.
ஃ
உணவு வைத்து காத்திருப்பர்
முன்னோர்கள் வருவார்களா என்று
காக்கை வடிவில்.
ஃ
கைமாறு அற்றக் கடப்பாடு,
குயில் முட்டைக்கு அடைகாக்கும்
காகம்.
ஃ
நேசர்படை சூழ்ந்து நிற்கும்
கூடுவிட்டகன்று பறக்கப் பழகும்
காக்கைக் குஞ்சு.
ஃஃஃ