பெப்ரவரி 13, 2008 இல் 11:23 பிற்பகல் (உணர்வுகள், கல்லூரி நாட்களில்)
உலகத்தின் மாந்தர்காள்- ஓர்
உண்மை கேளீரோ!…
உலகம் மக்கள் மற்று
உயிர் அனைத்தும்
இறைவன் படைத்தானாம்!…
ஓங்கி உயர்ந்த குன்றம்;
உள்ளம் கொள்ளைகொள் அருவி;
அன்னமென அசையும் பெண்டீர்;
காலை இளம் பரிதி, தென்றல்
யாவும் இறைவனே படைத்தானாம்!…
அழகனைத்தும், அறிவும்
படைத்த இறைவன்
துன்புற்று மாயும்
கூன், குருடு, நொண்டி, முடம்
யாவரையும் ஏன் படைத்தானாம்?…
பள்ளி பாடமதை
பரிட்சை நேரம் மறந்து போம்
மாணாக்கன் போல்
பிரணவத்தை அடிக்கடி மறப்பானோ
மனிதரை படைக்கும் போது…
இறைவன்?!…
ஃஃஃ
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கருத்துத் தெரிவிக்கவும்
பெப்ரவரி 13, 2008 இல் 10:59 பிற்பகல் (கல்லூரி நாட்களில், சமுதாயம்)
Tags: ஆசை, கவிதை, greedy, Kavithai
ஆசைக்கு அளவுண்டோ அளக்க புதுக் கோலுண்டோ
ஆசை பொன்மேற் கொண்டு ஆண்டவன்சிலைத் திருடுகின்றார்
பணம்மேல் ஆசை கொண்டே பச்சோந்தி ஆகின்றார்
பிணம் தின்னும் கழுகாக உலவித் திரிகின்றார்
நாகரீக ஆசை கொண்டே நஞ்சைக் கலக்கின்றார்
நகர்வலம் திரியும்போது காணும் பொருளுக்கு ஏங்குகின்றார்
பெண்மேல் ஆசை கொண்டே பித்தராகி அலைகின்றார்
பண்புகெட்டே கால மெல்லாம் பாரில் உலவுகின்றார்
காணும் பொருளுக்கு ஆசைகொண்டு அலையும் மாந்தரே
கணநேர ஆசை யகற்றி மலையென உயருங்கள்
அஞ்ஞான ஆசைதனை ஆண்டவன் அருள்கொண்டு ஒழித்து
மெஞ்ஞான அருள்பெற்றே மேன்மை எய்துங்கள்.
ஃஃஃ
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கருத்துத் தெரிவிக்கவும்
பெப்ரவரி 13, 2008 இல் 8:54 மு.பகல் (இயற்கை, ஹைகூ)
Tags: கலை அரசன், கவிதை, காளான், ஹைகூ, Haiku, Kalaiarasan, Kavithai, Mushroom
வீடு கட்ட மரம் வெட்டினார்
வேறுமரம் தேடி பறந்தது பறவை
கூடு கட்டி குடியிருக்க.
ஃ
அனாதையாக தெருவில், உதிர்ந்த முடிகள்;
தத்தெடுத்துக் கொண்டன பறவைகள்
மெத்தையாய் கூடுகளில்.
ஃ
எதிர்பார்ப்பில்லாத தாய்மை உணர்வு
அலகோடு அலகுவைத்து உணவூட்டியது பறவை
கூடுவிட்டு என்று பறக்குமோ குஞ்சு.
ஃ
சேமிப்பை கற்றறியவில்லை இன்னும்
மழைநேரம் இரைதேடி தவிப்போடு
பறக்கும் குருவி.
ஃ
இது சாத்தியமில்லாதது!….
எந்தக்கல்லூரியில் பொறியியல் பயின்றது?…
தொங்கும் தூக்கணாங்குருவி கூடு.
ஃஃஃ
1 மறுமொழி