இறைவனின் மறதி.

உலகத்தின் மாந்தர்காள்- ஓர்
உண்மை கேளீரோ!…

உலகம் மக்கள் மற்று
உயிர் அனைத்தும்
இறைவன் படைத்தானாம்!…

ஓங்கி உயர்ந்த குன்றம்;
உள்ளம் கொள்ளைகொள் அருவி;
அன்னமென அசையும் பெண்டீர்;
காலை இளம் பரிதி, தென்றல்
யாவும் இறைவனே படைத்தானாம்!…

அழகனைத்தும், அறிவும்
படைத்த இறைவன்
துன்புற்று மாயும்
கூன், குருடு, நொண்டி, முடம்
யாவரையும் ஏன் படைத்தானாம்?…

பள்ளி பாடமதை
பரிட்சை நேரம் மறந்து போம்
மாணாக்கன் போல்
பிரணவத்தை அடிக்கடி மறப்பானோ
மனிதரை படைக்கும் போது…
இறைவன்?!…

ஃஃஃ

எழுதிய நாள்: 31.08.1988.

1 மறுமொழி

  1. Sathya சொன்னது,

    நவம்பர் 28, 2009 இல் 3:19 பிற்பகல்

    கடவுள் மனிதனை ஊனமாய் படைத்தான் என்னும் நண்பரே அந்த மனிதருக்குள் இறைவன் படைத்த தன்னம்பிக்கை பற்றி என்ன சொல்ல முடியும் உம்மால்????
    கவவுள் மனிதரை முடமாய் படைத்தாலும், அவர்களின் மனதை புரிந்து கொள்ளும் நல்லவர்களையும் படைத்துள்ளான் இறைவன்.

    கவிதை நன்றாக உள்ளது உங்கள் படைப்புகள் தொடர என் இனிய வாழ்த்துகள்


மறுமொழியொன்றை வழங்குக