மனது
புயல் இல்லாத போதும்
திசையறியாது பறந்து கொண்டிருக்கின்றது…
கட்டுக்கடங்கா மனது.
கரைசேர்ந்திருக்குமோ கட்டுமரம்?
துடுப்பெய்த துணிந்திருந்தால்!…
துவண்ட மனம்.
காற்றிலலைந்து சலசலத்தது;
காய்ந்த பனையோலையாய்…
பயந்த மனது.
நினைத்ததெல்லாம் இனித்தது
வானவில்லாய் மறைந்தது
கற்பனை மனது.
மழையில் குடைபிடித்தது
நீரின் போக்கில் துடுப்பிட்டது
பண்பட்ட மனது.
<<>>
D.M.I.RAJ சொன்னது,
அக்டோபர் 19, 2010 இல் 1:26 மு.பகல்
super kavithai
aravind சொன்னது,
நவம்பர் 16, 2010 இல் 1:57 பிற்பகல்
வரிவரியாய் படித்தது
வாழ்த்துகளைப் பொழிந்தது
ரசிக்கும் மனது