அந்தி சாயும் வேளையிலே
………அமைதிமாய்க்கும் நோக்கத்திலே
வந்து வந்து விட்டில்பூச்சி
………தன்னிசை பாடும்
இரவு வரும் வேளையிலே
………அழகு சட்டையிலே
வரவு நோக்கும் கண்போலே
………வண்ணஓட்டைகளை தீட்டும்
தூக்கம் கொள்ளும் நம்மேலே
………துள்ளிதுள்ளி ஓடும்
பக்கம்வந்து தன்கால் முள்கொண்டு
………முத்தமொன்று பதிக்கும்.
சட்டிபானை அனைத்திலும் சென்று
………உணவுசுவை பார்க்கும்
பெட்டியுள்ளே இருக்கும் பொருள்
………அனைத்தும் கெடுக்கும்
தீ கண்டு மகிழ்ச்சியிலே
………துள்ளிதுள்ளி குதிக்கும்
தீயின் பசிக்கு இறையாக
………தன்னையோ கொடுக்கும்.
ஃஃஃ
