புண்ணியமே ஓடு….
கேடு கெட்ட சமுதாயம்!…
யாரோ ஓலமிடும் சத்தம் கேட்டு
அன்னாந்து பார்த்தேன் – அதற்குள்
அரைஞாண் கயிற்றைக் காணவில்லை.
குனிந்து பார்த்தேன் அரையை
அதோ!…
குல்லாவையும் பரித்துவிட்டு ஓடுகின்றான்.
கேடு கெட்ட சமுதாயம்!!…
தன்னந்தனியே தவித்து நின்றாள்
அண்ணா உதவியென்றாள்
பாசவார்த்தையின்
அதிர்வலை மறைவதற்குள்
நாலுபேர் மத்தியில் நின்று
அத்தான் என்னை கைவிட்டுவிடாதீர் என்றாள்…
அடடா!
பகல்வேசமிடும் பரத்தையர் கூட்டம்.
கேடு கெட்ட சமுதாயம்!!!…
“கருப்பு மலையின் அடியில்
தவம் கிடக்கும் சமவெளி உன் நெற்றியடி
வானத்தில் வட்டமிடும்
வெள்ளி நிலா உன் நெற்றிப் பொட்டடி
பூமயிலே உன் புன்னகையோ,
ஜாலமிடும் அருவி ஓசையடி
இணைந்த புல்லாங்குழல் – உன்
எடுப்பான நாசி துவாரமடி
ஒருமித்துப் பார்த்தால் – நீ
கந்தர்வக் கன்னியடி…”, என்றான்.
சொன்னானே கந்தர்வக் கன்னியென்று…
நின்றானா நிலையாக…
விட்டானா அவளையாவது
கன்னியாக!….
அட, பெண்ணே!…
நீ கோழையடி!!…
அவனோ சுத்த பரத்தையனடி!!!…
கேடுகெட்ட சமுதாயம்!…
கெட்டதோ சமுதாயம்?
கெடுத்தோமே ஜனநாயகம்…
தடுத்தோமா கொடுமை?
படித்தோமே பாரதியை
விடுத்தோமா பெண்ணடிமை?
உழுத்துப்போன சமுதாயம்…
உழைப்பை விட்டோம்,
உண்மையை விட்டோம்,
உயர்வோ நம்மை விட்டோடியது.
பாரதியை மட்டுமென்ன விட்டா வைப்போம்?!…
கேடுகெட்ட சமுதாயம்!!…
கெட்டுப் போக படித்தா தரவேண்டும்
எங்களுக்கு….
பண்டிதர்களாயிற்றே நாங்கள்!…
புழுதிகள் வந்தா
எங்களை அழித்துவிடப்போகின்றது
நாங்கள் பூகம்ப மாயிற்றே…
புண்ணியமே ஓடு – நீ
கண் ணிமைக்காமல் ஓடு
கண்ணை இருக மூடிக்கொண்டே ஓடு…
ஆம்,
கண்ணைத் திறந்தால் ஒட்டிக்கொள்வோம்
நாங்கள் கேட்காமலேயே கெடுக்கும்
புதுப் புயல்கள், புழுதிப் புயல்கள்
புண்ணிய தேசத்தின்
புழுதிபடிந்த புதுத்தூண்கள்
எங்கள் புழுதியில் கலந்துவிடாதே
ஏ புண்ணியமே ஓடு! ஓடு!!…
நண்பன் சொன்னான்
அவனுடன் பழகாதே
அவன் குள்ள நரி குணத்தவனென்று…
குதர்க்கமாக சொன்னேன்
குள்ள நரி என்றால் என்ன?
குறுக்கே போனால்
நல்ல சகுணம் தானே!…
நாய்போல் நன்றியோடு பழகுகின்றானே
இவனா நரியென்றேன்…
நண்பனையும் திட்டினேன், செல்லமாக…
நண்பனே!
நீ தீர்க்க தரிசி…
நீ நரியென்றவன்
செல்லாமல் செய்துவிட்டுப் போனதை
அறிவாயா?…
நாயனையன் அல்ல நான்…
நல்ல பாம்பனையன் என்று
என்னையும் விசமாக்கிச் சென்று விட்டான்….
நண்பனே!
நீ திர்க்க தரிசி!!…
நண்பனே!
கெட்டுப்போன கேடுகெட்ட சமுதாயம்
இதில் கெட்டுப்போகாமல் இருக்கும்
பட்டுப்பூச்சி நீ.
ஓய்ந்து விடாதே…
நாளைய மலர்கள்
உனக்காகவே மலரும்.
உயரே… உயரே… பறந்து செல்.
அதோ!
இன்றே மொட்டுக்கள் தயாராகிவிட்டது;
நாளைய மலர்கள் உனக்காகவே!!!.
ஃஃஃ
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »