வருவாய் வருவாயென காத்திருந்தேன்…

வருவாய் வருவாயென காத்திருந்தேன் கண்கள் அயர்கிறது
விழியோரம் வழியும் நீரில் உப்பே தெரிகின்ன்றது
வருவேனென்று சொன்னவன் நீதானா?!..
வினாக்கள் பல எழுகின்றது… (வருவாய்…)

உந்தன் சொற்கள் யாவும் நீர்மேல் எழுத்துக்களா?!
உலர்த்தும் வெயிலில் தெரியும் கானல் நீர்தானா…
உயிரை உன்மேல் வைத்தே
உலை அனலில் வேகின்றேன்
உயிரே உயிரே உயிரே…எந்தன்
உதிரத்தின் கொதிப்புக்கள் அடங்காகதா…. (வருவாய்…)

காதலின் வேதனை என்னை கனவிலும் வதைக்கின்றது
கதம்பமலர்ச் சோலை காற்றில் வீணே உதிர்கின்றது
கடவுளாய் நீயும் அமர்ந்துவிட்டாய் – என்
காதல் கோயிலின் உள்ளே
கண்டிட நானும் துடிக்கின்றேன் – நீயோ
கருத்தினில் மட்டும் தெரிகின்றாய்… (வருவாய்…)

அறிவாயா உணர்வாயா
எந்தன் வேதனை புரிவாயா?!…
புல்லின் நுணி பனித்துளிபோல்
எனைத்தொட்டு அமர்வாயா?!…
சொர்க்கத்தின் சுகமனைத்தும்
ஒருசேர தருவாயா?!….
சுகம்தான் சுகம்தான் காதல் என்று
நான் புலம்பிடச் செய்வாயா?!… (வருவாய்…)

* * *

Follow

Get every new post delivered to your Inbox.