வைகறைக் காற்றே வைகறைக் காற்றே
வாசல் பக்கம் வீசாயோ – இந்த
ஜன்னல் மலரின் உள்ளம் குளிர
சுகந்தம் சுமந்து வாராயோ
சோகம் மறந்து புன்னகை மலர
சோகத்தை அறிந்து செல்லாயோ…(வைறைக் காற்றே…)
தளிராய் இருக்கையில் புன்னகை மலர்ந்தோம்
இணைந்தே வயலில் நடந்தோம் கழித்தோம்…
நதியில் நடந்தோம் ஜதிகள் செய்தோம்…
நாணலைத் தொட்டோம் வணக்கம் பெற்றோம்
புனலில் புகுந்தே குளித்தோம் புத்துணர்வை உணர்ந்தோம்
சோலையில் புகுந்து மலரைத்தொட்டோம்
பூவின் மணத்தைப் பெற்றோமே…
கட்டுக்கள் இன்றி காவலுமின்றி
கனவுகள் தினம்தினம் வளர்த்தோமே….(வைகறைக் காற்றே…)
இணையாய் வளர்ந்தோம் இதயம் மலர்ந்தோம்
மாயம் என்ன கூறடியோ…உன்
மாற்றம் இல்லாதோற்றத்தின் காரணம் ஏதடியோ
விரைவாய் வளர்ந்தேன் – நான்
கன்னி மலராய் மலர்ந்தேன்
கனவுகள் சுமந்தேன் – காவலில் விழுந்தேன்
காலத்தின் கொடுமை பாரடியோ
கனவா இனிவிடுதலை கூறடியோ….(வைகறைக் காற்றே…)
* * *